குறுந்தொகை: பாடல் 238
குறுந்தொகை 238 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே.
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது.
குன்றியன்
பாசவல் - பச்சையான நெல்
காழ் - மர வயிரம்,மரத்தின் உறுதித்தன்மை
வரம்பணை - வரம்பு-எல்லை/நெல் வயலின் வரப்பு
துயிற்றி - கிடத்தி
வண்டல் - விளையாட்டு
அயரும் - அயர்(வினை.) கொண்டாடும்
தொண்டி - துறைமுகப் பட்டினம்
நலம் - பெண்மை நலம்
மகிழ்ந - மருதத் த தலைவன்
வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே(அகம்.10:13)
குறுந்.236:6,238:3-5
