குறுந்தொகை: பாடல் 239

குறுந்தொகை 239 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;

விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்

சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்

நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி

பாம்பு உமிழ் மணியின் தோன்றும்

முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.

சிறைப்புறம்.

ஆசிரியன் பெருங்கண்ணன்

தொடி - வளையல்

சாயின - மெலிந்தன

விடர் - பிளப்பு

முகை - முழைஞ்சு

முந்தூழ் வேலி - முள் நிறை மூங்கில் வேலி

காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.(குறள்.1251)

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.(குறள்.1149)

காமமும் நாணும் உயிர்காஆத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து(குறள்.1163)