குறுந்தொகை: பாடல் 240

குறுந்தொகை 240 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்

வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,

வாடை வந்ததன் தலையும், நோய் பொர,

கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்

கடல் ஆழ் கலத்தின் தோன்றி,

மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கொல்லன் அழிசி.

பனிப் புதல் - புதர்,சிறுதூறு

இவர்ந்த- படர்ந்த

வெருக்கு - காட்டுப் பூனை

கஞலி - செறிய, விளங்க