குறுந்தொகை: பாடல் 242
குறுந்தொகை 242 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.
குழற்றத்தன்
கானங் கோழி - காட்டுக் கோழி
கவர் குரல் - கவர்த்த குரல்
சேந்து - தங்கி
செலினும் - சிறப்புப் பொருளில் வந்தது
