குறுந்தொகை: பாடல் 243

குறுந்தொகை 243 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்

தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,

ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்

புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை

உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.

வன்புறை எதிர் அழிந்து சொல்லியது.

நம்பி குட்டுவன்

கவட்டிலை - பிளவுபட்ட இலை

அடும்பு - அடப்பங் கொடி

தார் - மாலை

கொழுதி - குடைதல்,மலர்த்தி

ஒண்பூ - அடம்பின் பூ

இமிழ் (வினை) - ஒலி,இனிய ஒலி

படீஇயர் - படுக,துயில்க