குறுந்தொகை: பாடல் 245
குறுந்தொகை 245 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே-
வாள் போல் வாய கொழு மடற் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மாலை மாறன்
அம் கானல் - அழகிய கானல்
ஆயம் - விளையாட்டு மகளிர்
நனி - மிகுதி(உரிச்சொல்)
இன்னாது - இன்னல் தருவது
வாள் - ஈர்வாள்
மாலை - வரிசை,நிரல்
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி/
நடு கல்லின் அரண் போல்(பட்டினப்பாலை 78 - 79)
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,/
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை(நற்றிணை 36:6-7)
அம்பல் ஊர் (குறுந்தொகை 51:6)
அம்பல் பெண்டிர் (அகம்.203:3)
அம்பல் மூதூர் (நற்.249:10,அகம்.218:19,347:7)
அலர்வாய்ப் பெண்டிர் (நற்றிணை 36:6,அகம்.70:6)
இன்னாது இசைக்கும் அம்பல் (குறுந். 139:5)
அம்பல் மூதூர் அலர்ந்து,/
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.(நற்றிணை 272:9-10)
வரையாது நெடுங்காலம் வந்தொழுக
நன்றி: http ://tamil concordance.in
