குறுந்தொகை: பாடல் 246
குறுந்தொகை 246 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
''பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது'' என்ப. அதற்கொண்டு,
ஓரும் அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம்.
கபிலர்
பாசடை- பசிய இலை
பனிக் கழி - குளிர்ந்த கழி
பானாள்(பால்+நாள்) - நடு இரவு
என்ப - அயலோர்
அதற்கொண்டு - அதைக் காரணமாக வைத்து
பின்னு - பின்னல்,சடை
கதுப்பு - கூந்தல்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை/
பெருங் களிற்றுச் செவியின் மான(குறுந்.76:3-4)
