குறுந்தொகை: பாடல் 247
குறுந்தொகை 247 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;
திறவோர் செய்வினை அறவது ஆகும்;
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை
வீயா மென் சினை வீ உக, யானை
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம்.
சேந்தம்பூதன்.
அணிப்படூஉம் - அண்மையில் நிகழும்,அணிமை
திறவோர் - கரணம் செய்யும் முறைகளைத் திறம்படக் கற்றோர்
புணை(பெயர்.) - தெப்பம், மிதவை
துணை(வினை.) - பற்றுக் கோடு,உதவி,ஆதரவு
அறவது - அறத்தொடு பொருந்தியது
ஆர் துயில் - ஆழ்ந்த உறக்கம்
இயம்பும் - ஒலி செய்யும்
மறு இல் நட்பு - குற்றம் அற்ற நட்பு
தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர், (குறுந். 146:3)
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்/
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,/
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!(அகம்.312:6-8)
