குறுந்தொகை: பாடல் 248
குறுந்தொகை 248 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.
உலோச்சன்
வரல் அன்மை - வாராதோ
ஈங்கு - இவ்வாறு
ஆகின்று - நடைபெறுகிறது
அடும்பு - அடம்பங் கொடி
இவர்(வினை.) - படர்தல், செல்லுதல்,உலாவுதல்,செறிதல்,பாய்தல்
ஊர(வினை.) - நகர,பரவ, நெருங்க
யாய் - செவிலி
ஆடு(வினை.) - அசைத்தல்
அரை - அடிப்பகுதி
