குறுந்தொகை: பாடல் 250
குறுந்தொகை 250 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,
இரலை நல் மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, கால் இயல்
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.
தலைமகன் பாகற்கு உரைத்தது.
நாமலார் மகன் இளங்கண்ணன்
பரல் - பருக்கைக் கல்
அவல் - பள்ள நிலம்
படுநீர் - அகப்பட்டுத் தங்கிய நீர்
மாந்தி - பருகி
துணை - பெண் மான்
இரலை - ஆண்மான்
நெறி முதல் - வழியில்
கால் - காற்று
உண்கண் - மையுண்ட கண்
தெரி தீம் கிளவி - ஆராய்ந்து உரைக்கும் சொல்
தீம் கிளவி - கேள்வி/கேட்பதற்கு இனிய சொல்
தெருமரல் - சுழற்சி
உய - உய்ய
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்/
இன்புறு துணையொடு மறு வந்து உகள (குறுந்.65:1-2)
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்/
காமர் துணையொடு ஏமுற வதிய,/
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி(அகம்.154:8-10)
இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் /
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை (கலித்தொகை 11:13-14)
சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’என்று எண்ணி,/
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்/
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்/
உள்ளம் படர்ந்த நெறி. (ஐந்திணை ஐம்பது, 38.)
