குறுந்தொகை: பாடல் 251
குறுந்தொகை 251 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
மடவ வாழி-மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
பிரிவிடைத் தோழி. ''பருவம் அன்று; பட்டது வம்பு'' என்று வற்புறுத்தியது.
இடைக் காடன்.
மஞ்ஞை - மயில்
மா இனம் - மயில் கூட்டம்
பெய்தென - பெய்ததாகக் கருதி
அதன் எதிர் - அம் மழைக்கு முன்
ஆலல் - மயிலின் குரல்
இகுளை - தோழி
படர் - துன்பம்
கழிந்த மாரி - சென்ற கார்ப் பருவ மழை
உகுத்தரும் - வீழும்
நொதுமல் - அயன்மை
