குறுந்தொகை: பாடல் 252
குறுந்தொகை 252 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன் முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
''மடவைமன்ற நீ'' எனக் கடவுபு
துனியல் வாழி-தோழி!-சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?
தலைமகன் வரவறிந்த தோழி, ''அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.
கிடங்கில் குலபதி நக்கண்ணன்
ஞெகிழ்த்த - நெகிழ்த்த (போலி)
காலை - வரும் நேரத்தில்/வரும் பொழுது
இன்முகம் - அக மகிழ்வு
மடவை - அறிவிலி
கடவுபு - வினவி, கேட்டு
துனியல் - வருந்தாதே
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. (குறள் 1284)
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. (குறள்.1286)
நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். ( குறள்.1260)
