குறுந்தொகை: பாடல் 253
குறுந்தொகை 253 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
பூங்கண்ணன்
விழுமிது- விழுமியது - சிறந்தது
நெகிழ் நூல் - நெகிழ்ந்த நூல்
நாள் துயர் - நாள்தோறும் படும் துன்பம்
மாதோ - மாது+ஓ - அசை நிலைகள்
புகா - உணவு
உறுத்த - செறித்து வைத்த
கல் அளை - மழை முழைஞ்சு
நன்றி: http ://tamil concordance.in
