குறுந்தொகை: பாடல் 254

குறுந்தொகை 254 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,

முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்

தலை அலர் வந்தன; வாரா-தோழி!-

துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;

பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-

''செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்

எய்தினரால்'' என, வரூஉம் தூதே.

பருவம் கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பார்காப்பான்

முலை ஏர் - முலையின் அழகு

மென் முகை - மெல்லிய அரும்பு

அவிழ்ந்த - மலர்ந்த

தலை அலர் - முதலில் மலரும் மலர்

பாயல் - படுக்கை

செய் பொருள் - அறம் செய்தற்குரிய பொருள்

நசைஇ - விரும்பி

எய்தினாரால் - ஆல் அசை நிலை

வரூஉம் தூதே - இன்னிசை அளபெடை

யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்(குறுந்.116:1)

தண் நறுங்கதுப்பு(அகம்.391:6)

தாழ் கதுப்பு அணிகுவர் காதலர்(கலி.4:11)

நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி(குறுந்.190:1)

கோங்கு முகைத்து அன்ன குவி முலை(அகம்.240:11)