குறுந்தொகை: பாடல் 255
குறுந்தொகை 255 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
‘’இடைநின்று மீள்வர்’’ எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
கடுகு பெருந் தேவன்
பொத்து - பொந்து,உள்துளை
காழ - காழ்ப்புடைய
அத்த - அருவழி
யாஅத்து - யா மரத்தினது
பொரி அரை - பொரிந்த அடி மரம்
தடக்கை - பெரிய கை
வாங்கி - வளைத்து
உயங்கு நடை - பசியால் வருந்தும் நடை
பெரு நிரை - பெரிய நிரை,பெரிய கூட்டம்
இறீஇயர் - முடிக்கும் பொருட்டு
காமர் - விருப்பம்
பிணி - பற்று(பொருள் - பற்று)
வெங் காதலர் - விரும்பும் காதலர்
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும் (குறுந்தொகை 37:2-4)
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், (குறுந்தொகை 232:4-5)
