குறுந்தொகை: பாடல் 256

குறுந்தொகை 256 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

''மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்

பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,

மான் ஏறு உகளும் கானம் பிற்பட,

வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்

தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?'' எனச்

சொல்லாமுன்னர், நில்லா ஆகி,

நீர் விலங்கு அழுதல் ஆனா,

தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.

பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது

மணி - நீல மணி

பிணி கால் - பிணித்த வேர்(பிணி-வினை.)

மென் கொம்பு - மெல்லிய கொம்பு (குச்சி)

பிணை - பெண் மான்

மாந்து - தின்,உண் (வேண்டிய அளவு உண்ணுதல்)

அவ் வரை - அது வரை/அக் காலம் வரை

தாங்கல் - பிரிவைப் பொறுத்தல்

வினை நலம் - தொழிலால் பெறும் நன்மை