குறுந்தொகை: பாடல் 257
குறுந்தொகை 257 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஓராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
உறையூர்ச் சிறுகந்தன்
முதல் - அடிமரம்
ஓராங்கு - ஒன்று போல
தூங்குபு - தொங்கி
தொடரி - தொடர்ந்து
கீழ் தாழ்வு அன்ன - கீழே விழுதல்
ஆர்கலி - ஆரவாரம்
இகலும் - மாறுபடும்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்/
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! (குறுந்.18:4-5)
