குறுந்தொகை: பாடல் 260

குறுந்தொகை 260 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்

வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;

சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;

வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்

மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை

வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,

கன்று இல் ஓர் ஆ விலங்கிய

புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.

அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.

கல்லாடனார்.

செற்றும் - செறியும்

பொருவார் - பகைவர்

தொண்டையர் - தொண்டை நாட்டு அரசர்

வழை - சுர புன்னை

அமலுதல் - அடர்தல்

அடுக்கம் - பக்க மலை

விலங்குதல் - தடுத்தல்