குறுந்தொகை: பாடல் 262
குறுந்தொகை 262 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
ஊஉர் - (இன்னிசை அளபெடை)ஊரார்,ஊர் மக்கள்
சேரி - தெரு
கல் - ஒலிக் குறிப்பு (ஊர் அலர்)
ஆனாது - ஓயாது, இடைவிடாமல்
அறன் - அறம்
எயிறு - பல்லின் விளிம்பு
தயங்க - பொலிய, அழகுமிகு
ஆய்ந்திசின் - சின் - தன்மை அசை
ஆல் - அசை நிலை
விலங்கு மலை -விலங்கு - குறுக்கிடுதல்
கவாஅன் - (செய்யுளிசை அளபெடை)தாழ்வரை
நிலைஇய -(சொல்லிசை அளபெடை)தேங்கிய
அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பைத்/
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு /
உவலைக் கூவல் கீழ
மான் உண்டு எஞ்சிய கழிலி நீரே(ஐங்.203)
