குறுந்தொகை: பாடல் 265
குறுந்தொகை 265 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.
வரையாது பிரிந்த இடத்து, ''அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்'' எனத் தோழி தலைமகட்குக் கூறியது.
கருவூர்க் கதப்பிள்ளை
காவல் செல்லாது - காத்திராது
செம்மைச் சான்றோர் - நடுவு நிலைமை உடைய பெரியோர்
இடன் - இடம்(போலி)
நன்னர் - அன்பு ,நல்ல
ஏகல் - உயர்ச்சி, உயர்ந்த
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் (நற்.238:3)
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி/ வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் (அகம்.183:11-12)
