குறுந்தொகை: பாடல் 269
குறுந்தொகை 269 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
''இனி வரின் எளியள்'' என்னும் தூதே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
கல்லாடனார்
துனை - விரைவு
அசாவாது (அசாவி-வினை)- தளர்ச்சி அடையாது
உசாவுநர் - கேட்போர், வினவுவார்
மன்,தில்ல - அசை நிலைகள்
வயச் சுறா - வலிமை மிக்க கடல் மீன்
''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்
சேரி விலைமாறு கூறலின் (அகம்.140:7-8)
''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும் (அகம்.390:8-9)
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய (குறுந்.269:5)
கடல் விளை அமுதம்(நற்.88:4)
வணிகம் பற்றிய கட்டுரை விவரம்
த.வசந்தாள்
'செவ்வியல் தமிழ் இலக்கியங்களில் வணிகப் பதிவுகள்' தமிழியல் ஆராய்ச்சி ( தொகுதி - 37)பொற்கோ (பதிப்பாசிரியர்), சென்னை: புலமை மன்றம் , 2020
நன்றி: http://tamil concordance.in
