குறுந்தொகை: பாடல் 270
குறுந்தொகை 270 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.
பாண்டியன் பன்னாடு தந்தான்.
துமிய - துணி பட
உறை - மழைத் துளி
ஊழ் - முறை
கடிப்பு - குறுந்தடி
இடித்து இடித்து - அடுக்குத் தொடர்
தாழ்இருள், வீழ் உறை - வினைத் தொகை
மேவினம், அணையேம் - தன்மைப்பன்மை
