குறுந்தொகை: பாடல் 271

குறுந்தொகை 271 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

அருவி அன்ன பரு உறை சிதறி

யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,

உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது

தவப் பல் நாள் தோள் மயங்கி,

வௌவும் பண்பின் நோய் ஆகின்றே.

தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

அழிசி நச்சாத்தனார்

அன்ன - உவமை உருபு

பரு உறை - பருத்த மழைத் துளி

நிறை - வெள்ளம்

தவ - மிகுதி

வௌவுதல் - கவர்தல்

பண்பின் நோய் - தன்மையற்ற நோய்

மன், உம்,மற்று - அசை நிலைகள்

(குறுந்.169:2-3)

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று(குறள்.1146)