குறுந்தொகை: பாடல் 273

குறுந்தொகை 273 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்

பெருங் காடு உளரும் அசைவளி போல,

தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!

நொந்தனைஆயின், கண்டது மொழிவல்;

பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு

அறியாது ஏறிய மடவோன் போல,

ஏமாந்தன்று, இவ் உலகம்;

நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

''பிரிவர்'' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

சிறைக்குடி ஆந்தையார்

அல்கு - இரவு

முகை - அரும்பு

முதுமால்பு - பழைய ஏணி

தெளிமே - தெளிவாயாக

வீ கமழ் கானம் (அகம்:164:7)

மரம் தலை மணந்த நனந்தலைக் கானம்(நற்.394:1)

பல் பூங் கானம் (அகம்.398:20)

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்

பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை

அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை

திருந்து வேல் அண்ணற்கு விருந்து ( மலைபடு.315-319)