குறுந்தொகை: பாடல் 275
குறுந்தொகை 275 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணற் காட்டாறு வரூஉம்
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.
ஒக்கூர் மாசாத்தி
எல் -பகல்
ஊர்ந்து - படர்ந்து
உயர்பு - உச்சி
கண்டனம் - கண்டு வருவோம்
சென்மோ - செல்லுவோம், மோ (முன்னிலை அசை )
புல் ஆர் நல் ஆன் -பசு
பூண்மணி - கழுத்து மணி
கொல்லோ - கொல்+ஓ- அசைநிலை
இயம்புதல் - ஒலித்தல்
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு (அகம்.184:5)
செம்மல் நெஞ்சம் (நற்.393:8)
செம்மல் மூதூர் (நற்.130:4,அகம்.15:7,புறம்.37:11)
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக்/
கண்டனம் வருகம் சென்மோ தோழி (நற்.235:6-6)
நன்றி: http ://tamil concordance.in
