குறுந்தொகை: பாடல் 276
குறுந்தொகை 276 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பணைத் தோட் குறுமகள் பாவை தைஇயும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோ தானே-இவ் அழுங்கல் ஊரே!
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது.
கோழிக் கொற்றன்
பணை - மூங்கில்
பணைத் தோள் - பருத்த தோள்
தைஇ - செய்து,பண்ணி
பஞ்சாய் - ஒரு வகைக் கோரைப் புல்
உருத்து எழு - வடிவுற்ற
ஒளி, நிறம்
தொய்யில் - தலைவி முலையில் தலைவன் எழுதும்/ வரையும் ஓவியம்
கடவு(வினை.) - கேள்
பேதை - பேதமை
அளிதோ தானே - ஓ,தான்,ஏ அசைகள்
அழுங்கல் - ஆரவாரம்
தொய்யில்
---------------------
கலித்தொகை
54:12,97:12,111:17,117:4,125:8,142:44,143:33
தொய்யிலும்
-------------------------
கலித்தொகை 18:3
தொய்யிலை
-------------------------
அகநானூறு 177:20
தொய்யிற்கு
-----------------------
கலித்தொகை 63:8
அகநானூறு 389:1-9
நன்றி: http://tamil concordance.in
