குறுந்தொகை: பாடல் 277

குறுந்தொகை 277 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,

செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது

ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே-

''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,

எக் கால் வருவது?'' என்றி;

அக் கால் வருவர், எம் காதலோரே.

தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது.

ஓரிற் பிச்சையார்

ஆசு - குற்றம்

அமலை - சோற்றுத்திரள்

வெள்இழுது - வெண்ணெய்

அற்சிரம் - பனிக்காலம்

சேமச் செப்பு - காப்புத் திறன் பெற்ற கலம், குடுவை,செப்பு

மறுவில் செய்தி மூவகைக் காலமும்/நெறியின் ஆற்றிய அறிவன்(தொல்.புறத்.நூ.20)

சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய(தொல்.கற்பியல்.நூ.12)

பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்/

வருவீர் உளீரோ..(குறுந்.118:3-4)

வரை கோள் அறியாச் சொன்றி /நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே(குறுந்.233:6-7)

சங்க இலக்கியத்தில் மனித நேயம் சென்னை : என்.சி.பி.எச்., 2012- முனைவர் த.வசந்தாள்