குறுந்தொகை: பாடல் 278

குறுந்தொகை 278 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து

முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்

சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்

கொடியர் வாழி-தோழி!-கடுவன்

ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,

ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்

பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது.

பேரிசாத்தன்

உறுவளி - மிகுதியான காற்று

உளரிய - கோதிய

மாஅத்து - மா+அத்து (அத்து சாரியை)

முறி - தளிர்

ஊழுறு தீம் கனி - முதிர்ந்த கனி/பழுத்த பழம்

ஓர்ப்பன - ஆராய்தல்/தெரிந்தெடுத்தல்

பார்ப்பு - குட்டி

நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப (குறுந்.249:2)

பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும் (குறுந்.335:4)