குறுந்தொகை: பாடல் 279
குறுந்தொகை 279 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை மருதன் இளநாகனார்
திரிமருப்பு - முறுக்கேறிய கொம்பு
மை ஆன் - கரிய நிற எருமை,பசு
மிடறு - கழுத்து
பகுவாய் - பிளந்த வாய்
தெண்மணி - தெளிந்த ஓசை உடைய மணி
புலம்பு - தனிமை
துறுகல் - பொற்றைக் கல்
மாசுஅறக் கழீஇய யானை போலப்/
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் (குறுந்13:1)
மன்உயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா
என்அல்லது இல்லை துணை(குறள்.1168)
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்/
யாமத்தும் யானே உளேன்.(குறள்.1167)
