குறுந்தொகை: பாடல் 280
குறுந்தொகை 280 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.
கழற்றெதிர்மறை
-நக்கீரர்
கேளிர் - அண்மை விளி, கேண்மை உடையீர்
ஆகம் - மேனி
புணரப் புணரின் - கூடக் கூடும்
