குறுந்தொகை: பாடல் 281
குறுந்தொகை 281 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.
குடவாயிற் கீரத்தன்
பொதுளிய - தழைத்த
பைங்கால் - ஈரத்தன்மை பெற்ற அடிப்பகுதி
கொம்மை -திரட்சி
போந்தை - பனை மரம்
குடுமி - உச்சி
வெண்தோடு - குருத்தோலை
அத்த - வழி
அமலை வான் பூ - வேம்பூங் கொத்து
வான் பூ - தூய மலர்
சுரி - சுருண்ட
உளை - பிடரி மயிர்
தலை - தலைவன் தலை
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, (புறம்.265:2-3)
போந்தை வேம்பே ஆரென வரூஉம்/மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல்.புறத்.நூ.5)
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, (புறம்.34:9-10)
