குறுந்தொகை: பாடல் 285
குறுந்தொகை 285 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
வைகா வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பருவம் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது.
பூதத் தேவன்
வைகா -நிலையற்ற, நாள்தோறும்,தினம் தினம்
வைகல் - காலை, விடியற்காலம்,நாள்,நாட்கழிவு
வைக(வினை.) - தங்க,காலநீட்டிப்பு
வைகுதல் - பகல் நேரத்தில்
வைகவும் - பகல் நேரத்திலும்,பகலாக இருக்கும் பொழுதும்
வாரார் - வராத தலைவன்
எல்லா - காத்திருந்த, இதுவரைச் சென்ற எல்லாப் பகற்பொழுதும்
எல்லை - எல்(ஒளி,சூரியன்)+ஐ- ஒளி குறைந்து கொண்டே இருக்கும் பகலின் எல்லை
எல்லோரும்(எல்ல+உம்)
எல்லுதல் - ஒளி மங்குதல்,ஒளி மழுங்குதல்/பகலின் எல்லை, மாலைப்பொழுது
இமைக்கண் - நேரத்துளி,இமைப் பொழுது
பயிரி - மீண்டும் மீண்டும் அழைத்து
உகக்கும் - உயரும்
உகப்பே உயர்தல் உவப்பே உவகை(தொல்.உரி.நூ.8)
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேதுறல் ஆய் கோடு இட்டுச்
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண் (குறுந்.358:1-4)
வாள்அற்றுப் புற்குஎன்ற கண்ணும் அவர்சென்ற
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.(குறள்.1261)
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.(குறள்.1269)
