குறுந்தொகை: பாடல் 286

குறுந்தொகை 286 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று

அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்

ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,

பேர் அமர் மழைக்கண், கொடிச்சி

மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.

இரந்துபின் நின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.

எயிற்றியனார்

அமிழ்தம் - வாயூறல்

கமழ்தல் - பரவுதல்

அகில் ஆரம்(ஆகுபெயர்) - அகிற் புகை, சந்தனப்புகை

அமர் - விருப்பம்

மழைக்கண் - குளிர்ச்சி பொருந்திய கண்

மூரல் - முறுவல், புன்சிரிப்பு

மதைஇய - செருக்குற்ற

அறல் வாழ் கூந்தல் (மலை.304)

அறல் அன்ன இரும்பல் கூந்தல் (அகம்.142:18)

அறல் என நெறிந்த கூந்தல் (அகம்.213:23)

அறல் என அவிர் வரும் கூந்தல் (அகம்.162:10)

அறலின் நெறித்த கூந்தல்(அகம்.265:8)

அறல் மருள் கூந்தல் (அகம்.299:18)

அறல் போல் கூந்தல் (குறுந்.286:3)

தெண் திரை அவிர் அறல் கடுப்ப(மதுரைக்.519)

கதுப்பு அறல்(ஐங்.345:3)