குறுந்தொகை: பாடல் 288
குறுந்தொகை 288 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது வரவுணர்ந்து, ''நம்பெருமான் நமக்கு அன்பிலன்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கபிலர்
கறி - மிளகு
அடுக்கம் - மலைச் சரிவு
முறி - தளிர்
ஆர்ந்து - அருந்து
ஒருங்கு - ஒன்று கூடி, ஒன்று சேர
இனம் - உறவு
புத்தேள் நாடு - நல்ல நாடு
உயர் நிலை உலகம் (புறம்.249:11,பதி.52:9... )
அரும் பெறல் உலகம் (புறம்.62:13,அகம்.213:18)
புத்தேள் உலகம் (மதுரைக்.698)
மறுமை உலகம் (அகம்.66:2)
பெரும் பெயர் உலகம் (குறுந்.83:2)
மேலோர் உலகம் (புறம்.229:22,240:6)
தேவர் உலகம் (புறம்.228:11)
வரையா நிரையம் (குறுந்.292:6)
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;
மிக்க அறமே விழுத்துணை ஆவது( மணிமேகலை, சிறை செய் காதை,137-138)
அறம் எனப் படுவது யாதுஎனக் கேட்பின்/
மறவாதுஇதுகேள் மண் உயிர்க்கு எல்லாம்/
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது/
கண்டது இல்” (மணி. 25: 228-231)
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்/
அல்லது செய்தோர் அருநரகு அடைதலும்/
(மணி. 16 :88-89)
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.(குறள்.34)
புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.(குறள்.298)
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;(புறம்.192:1)
அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (புறம்.55:10)
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்(புறம்.195:6-7)
நன்றி- http ://tamil concordance.in
