குறுந்தொகை: பாடல் 289

குறுந்தொகை 289 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

வளர்பிறை போல வழிவழிப் பெருகி,

இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு

குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய்,

உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,

மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;

பட்ட மாரி படாஅக்கண்ணும்,

அவர் திறத்து இரங்கும் நம்மினும்,

நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.

''காலம் கண்டு வேறுபட்டாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''காலத்து வந்திலர்" என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், ''கொடியர்'' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்''என்று, தலைமகள் சொல்லியது

பெருங்கண்ணன்

எவ்வம் - துன்பம்

சாஅய் - மெலிந்து

உழையர் - பக்கத்தில் இருப்போர்

மான்று - மயங்கி

பட்டன்று - பட்டது, பெய்தது

அழுங்குதல் - கலக்கம் எய்தல்