குறுந்தொகை: பாடல் 291
குறுந்தொகை 291 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, ''அவள் விளி'' என, விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு உரைத்தது.
கபிலர்
சுடு புனம் - வளம்மிக்க புனம்
கலித்தல் - தழைத்தல்
ஏனல் - தினை
கொடிச்சி - குறிஞ்சி நிலத் தலைவி
குளிர் - கிளி கடி கருவி
பாணி - இசைப் பாட்டு
புலந்து - வருந்தி
விழல் - விழுதல்
ஓவாது - ஒழியாமல், இடைவிடாமல்,தொடர்ந்து
