குறுந்தொகை: பாடல் 294
குறுந்தொகை 294 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே.
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
அஞ்சில் ஆந்தை
தொடலை - மாலை
ஆயம் - விளையாட்டு மகளிர்
தழூஉ அணி - குரவைக் கூத்து
கதுமென - விரைந்து
துத்தி - புள்ளி
பைத்து(பைத்தல்) - விரிதல்
கோடு - பக்கம்
குழைத்தழை - குழைவு உடைய தழை/இளந்தழை
தழையணி அல்குல் மகளிருள்ளும்/
விழவு மேம்பட்ட என் நலனே(குறுந்.125:3-4)
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி/
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,/
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, அகம்.176:13-15
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி,(மதுரைக்.329)
சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ)
சேரி* தொறும் நின்ற குரவை, (மதுரைக்.614 – 615)
*மன்று(பாட வேறுபாடு)
கடலாடு மகளிர் கானல் இழைத்த
சிறுமனைப் புணர்ந்த நட்பே(குறுந்.326:2-3)
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்/
நீராக நீளும்இந் நோய்.(குறள்.1147)
