குறுந்தொகை: பாடல் 295

குறுந்தொகை 295 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,

தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,

விழவொடு வருதி, நீயே; இஃதோ

ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை

பெரு நலக் குறுமகள் வந்தென,

இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.

வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.

தூங்கலோரி

பெருநலக் குறுமகள் - பெருவளம் பெறக் காரணமான தலைவி

ஓர் ஆன் - ஒரே ஒரு ஆன்(பசு/ எருமை)

வல்சி - உணவு

சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்

நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை

ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்

ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,

மேயினள்கொல்?'' என நோவல் யானே (அகம்.369:22-26)

வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை/

ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,/

விழவின் செலீஇயர் வேண்டும் மன்னோ; (நற்.390:4-6).

ஔவையார்

நன்றி: http ://tamil concordance.in