குறுந்தொகை: பாடல் 296

குறுந்தொகை 296 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

அம்ம வாழி-தோழி!-புன்னை

அலங்குசினை இருந்த அம் சிறை நாரை

உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்

கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்

தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,

கடிய கழறல் ஓம்புமதி-''தொடியோள்

இன்னள் ஆகத் துறத்தல்

நும்மின் தகுமோ?'' என்றனை துணிந்தே.

காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

பெரும்பாக்கன்

அம்ம - கேட்பித்தல்

வாழி - அசைநிலை

அலங்கு சினை - அசைகின்ற சினை/ கொம்பு/ கிளை

சிறை - சிறகு

உறு - மிகுதி

செறு - வயல் / கழனி

முனையின் - வெறுத்த பொழுது

நயக்கும் - விரும்பும்