குறுந்தொகை: பாடல் 298

குறுந்தொகை 298 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

சேரி சேர மெல்ல வந்துவந்து,

அரிது வாய்விட்டு இனிய கூறி,

வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்

பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-

இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை

வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்

மடப் பிடிப் பரிசில் மானப்

பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.

கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது.

பரணர்

சேரி - தெரு

அரிது - அருமை

வைகல் - விடியற்காலை

பைதல் - துன்பம்

அகுதை - ஆற்றல் மிக்க பெருவீரன்

வெண் கடைச் சிறுகோல் - வெள்ளிப் பூண்போட்ட தலைக் கோல்

மான - உவம உருபு

பிறிதொன்று - வேறானது

நெடும் புறநிலை - நீண்ட நேரம் புறத்தில்/வெளியில் நிற்றல்

பாப்புக் கடுப்பன்ன தோப்பி (அகம்.348:7)

தேள் கடுப்பன்ன நாட்படு தேடல் (புறம்.392:16)

நறவு மகிழ் இருக்கை (அகம்.97:2)

நறவு உண் மண்டை (அகம்.96:1)

நறவு மலி பாக்கம் (குறுந்.394:2,அகம்.196:1)

நறவு மலி மறுகு (அகம்.126:10)

வசைவிடக் கடக்கும் வயங்கு பெருந் தானை/

அகுதை(அகம்.208:17-18)

மறப்போர் அகுதை (புறம்.347:5)

இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த/

நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு/

அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி(அகம்.97:9-11)

வெண்கடைக் கோல் (புறம்.39:2-3)

அகவன் மகளே! அகவன் மகளே!/

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்/

அகவன் மகளே!..(குறுந்.23:1-2)