குறுந்தொகை: பாடல் 299

குறுந்தொகை 299 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்

புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,

இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,

புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்

கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்

கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்

மணப்பின் மாண்நலம் எய்தி,

தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?

சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

வெண்மணிப் பூதி

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.(குறள்.1233)

புணரி - அலை

திளைத்தல் - மோதித் தழுவுதல்

இமிழ் - ஆரவாரம்

இணர் - பூங் கொத்து

எக்கர் - இடுமணல்

மன், மற்று, ஏ - அசைநிலைகள்