குறுந்தொகை: பாடல் 300
குறுந்தொகை 300 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, ''அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.
சிறைக்குடி ஆந்தையார்
குவளை,ஆம்பல்,தாமரை - மலர்கள் (ஆகுபெயர்)
நாறும் - மணக்கும்
குவை - குவியல்
தேம் - தேன்
கொங்கு - தாது
தித்தி -சுணங்கு
மாயோள்- மாமை நிறம் உடையவள்
மாஅயோயே -விளி
அஞ்சல் -அஞ்சாதே
அஞ்சலையே(அஞ்சல்+ஐ+ஏ) - அஞ்சற்க, அஞ்சாதே
விடல் சூழ்தல் - விடக் கருதுதல்
உரியை- வாழி!என் நெஞ்சே!(நற்.16:1-4)
சிறைக்குடி ஆந்தையார்
..................கரும்பின்/
காலெறி கடிகைக் கண் அயின் றன்ன/
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்(குறுந்.267:2-4)
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்/
வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய/
வாரேன் வாழிய நெஞ்சே!' (பட்டினப்பாலை.218-220)
பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.(குறள்.1121)
…………………..முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய்………. (குறுந்.286:1-2)
.......நன்னன் நல் நாட்டு/
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்/
யாரோ பிரிகிற்பவரே..(நற்.391:6-8)
