குறுந்தொகை: பாடல் 305

குறுந்தொகை 305 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

கண் தர வந்த காம ஒள் எரி

என்பு உற நலியினும், அவரொடு பேணிச்

சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே

வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்

குப்பைக் கோழித் தனிப் போர் போல,

விளிவாங்கு விளியின் அல்லது,

களைவோர் இலை-யான் உற்ற நோயே.

காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.

குப்பைக் கோழியார்.

அருங் காட்சியம் - ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை

இடை - இடம்

கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்/

தாம்காட்ட யாம்கண் டது.(குறள்.1171)

கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும்/

இதுநகத் தக்கது உடைத்து.(குறள்.1173)

உடம்பும் உயிரும் வாடிய கண்ணும்/

என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக்/

கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை.(தொல்.பொருளியல்.200)

மனை உறை கோழி குறுங் கால் பேடை (குறுந்.139:1)

குக்கூ என்றது கோழி (குறுந். 157:1)

குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் (குறுந்.234:4)

குப்பைக் கோழி தனிப் போர் போல (குறுந்.305:6)

கூகைக் கோழி வாகைப் பறந்தலை(குறுந்.393:3)

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.(குறள்.1159)

ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு

நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்

குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி

ஒளிப்பினும், காமம் சுடும். (நாலடியார்.90)