குறுந்தொகை: பாடல் 306
குறுந்தொகை 306 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
''மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்'' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது.
அம்மூவன்
மெல்லிய - மென்மை நிறை மொழி
இனிய - கேட்டார்க்கு இன்பம் பயக்கும் மொழி
மேவரு தகுந - விரும்பத் தகுவன
மா அத்து - மா மரம்
தாது - மாம் பூவின் மகரந்தப் பொடி
அமர்(வினை.) - விருப்பம்
அயரும் - மயங்கும்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.(குறள்.1259)
