குறுந்தொகை: பாடல் 309

குறுந்தொகை 309 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,

நீடிய வரம்பின் வாடிய விடினும்,

''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது,

பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்

நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-

நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,

நின் இன்று அமைதல் வல்லாமாறே.

பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

உறையூர்ச் சல்லியன் குமாரன்

செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக்/

காணார் முதலொடு போந்தென, பூவே/

படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்/

தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,/

தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்/

பேதை நெய்தல்..(நற்.275:1-6)

கைவினை மாக்கள் - உழவர்

செய்வினை - களை கட்டல்

உண - உண்ண (இடைக்குறை)

கொடியோர் - ஊரார்

செறு - வயல்

இன்னாதன - தலைவியைப் பிரிதல்,பரத்தையரோடு புனலாடல்...