குறுந்தொகை: பாடல் 311
குறுந்தொகை 311 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்
யான் கண்டன்றோஇலனே; பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத்
தாது சேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
சேந்தன்கீரன்
வலவன் - தேர்ப்பாகன்
கல் - ஒலிக் குறிப்பு
கடுந்தேர் - கடிது ஓடும் தேர்
நிகர் மலர் - ஒளி மலர்
ஆயம் - மகளிர் கூட்டம்
கண்டன்று - கண்டது
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,/
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை (குறுந்.262:1-2)
யாய் அறிந்து உணர்க'' என்னார், தீ வாய்/
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,/
''இன்னள் இனையள், நின் மகள்'' என, பல் நாள்/
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,(அகம்.203:2-5)
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் ஊர்.(குறள்.1150)
புன்னை அம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே. (குறுந்.320:7-8)
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே (நற்.149:10)
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற்.143:7)
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சி (குறுந்.373:3)
அம்பல் பெண்டிர் (அகம்.203:3)
.......கொங்கர்/
மணி அரை யாத்து மறுகின் ஆடும்/
உள்ளி விழவின் அன்ன,/
அலர் ஆகின்று,அது பலர் வாய்ப் பட்டே? (அகம்.368:16 -19)
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். (குறள்.1147)
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் (குறுந். 112:1)
நன்றி - http ://tamil concordance.in
