குறுந்தொகை: பாடல் 313

குறுந்தொகை 313 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை

நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,

பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு

யாத்தேம்; யாத்தன்று நட்பே;

அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.

இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, ''பண்பிலர்'' என்று இயற்பழித்த தோழிக்கு, ''அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!'' என்று, சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது

நீத்து நீர் - நீந்துவதற்குக் காரணமான நீர்

இருங் கழி - கரிய கழி

சேக்கும் - தங்கும்,உறையும்

யாத்தேம் - பிணித்தல், கட்டுதல்,நீங்காது இருத்தல்

யாத்தன்று - பொருந்தியது

அவிழ்த்தல் - பிரித்தல்

கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே (ஐங். 184:4)

நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;/

என்றும் என் தோள் பிரிபு அறியலரே''/

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்/

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,/

புரைய மன்ற, புரையோர் கேண்மை;(நற்.1:1-5)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று;/

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்/

கருங் கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு/

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்.3)

நன்றி - http ://tamil concordance.in and

Dr Kannan Vaithianathan, Wildlife Biologist