குறுந்தொகை: பாடல் 314

குறுந்தொகை 314 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்

தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,

பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,

வாரார் வாழி!-தோழி!-வரூஉம்

இன் உறல் இள முலை ஞெமுங்க-

இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவம் காட்டி, அழிந்து கூறியது.

பேரிசாத்தன்

சேய் உயர் - ஒரு பொருட் பன்மொழி

கமஞ்சூல் - நிறைவு

தண் குரல் - முழக்கம்

எழிலி - மேகம்,முகில்

ஒண் சுடர் - மின்னல்

இமைப்ப - இமைத்தல்,விளங்குதல்

பெயல் - மழை

தாழ்பு - பெய்து(தாழ்வு)

இன் உறல் - தழுவுதல்

ஞெமுங்க - அழுந்தும்படி

தாழ் இருள் துமிய மின்னி, தண்ணென/

வீழ் உறை இனிய சிதறி, ஊழின்/

கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்/

பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!(குறுந்.270:1-4)

நன்றி - http ://tamil concordance.in