குறுந்தொகை: பாடல் 315
குறுந்தொகை 315 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
எழுதரு மதியம் கடற் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்-தோழி!-
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.
வரைவிடை, ''வேறுபடுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை வேளாதத்தன்
மதியம் - நிலவு, திங்கள்
நெருஞ்சி - முட் செடி
சிறியிலை நெருஞ்சி (குறுந்.202:2)
ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்
குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி
ஒளிப்பினும், காமம் சுடும். (நாலடியார்.90)
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல/
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்/
மாரி அம்பின் மழைத் தோல் சோழர்/
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை/
ஆரியர் படையின் உடைக என்/
நேர் இறை முன்கை வீங்கிய வளையே (அகம்.336:18-23)
நன்றி - http ://tamil concordance.in
