குறுந்தொகை: பாடல் 322
குறுந்தொகை 322 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது.
ஐயூர் முடவன்
அமர் - விரும்பு
ஆமான் - காட்டுப் பசு
குழவி - கன்று
வெரீஇ - அஞ்சி
மரீஇ - மருவி, கலந்து
அவண் - அங்கு
வல்லியாங்கு - வல்லுதல்,வலிமை உடையதாதல்,வன்மை
மருவின் - மருவு - ஒன்றாதல்,கலத்தல்,பொருந்துதல்,தழுவுதல்,நெருங்குதல்,சேருதல்,கிடைத்தல்
ஒல்வாங்கு - ஒன்று (வினை),ஒல்லுதல்,பொருந்துதல்.
களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்/ திங்கள் இரண்டின் அகம்என மொழிப.(இ.அ.நூ.32)
உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்/
என்உற்றனகொல் இவைஎனின் அல்லது/
கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை."(தொல்.பொருளியல்,நூ.8)
நன்றி - http ://tamil concordance.in
